Wednesday, April 28, 2010



வார்த்தைகள் கவிதையாய் மலரும் தமிழமுதம்...
ஒலிகள் இசையாய் மாறுவது அற்புதம்...

இவ்விரண்டும் புணர்ந்து பாடல்களாவது ஏகாந்தம்...
அவை நம் விருப்பத்திற்கு ஏற்ப அமைவது பெரும் சுகம்...

இப்பாடல்கள் நம் எண்ணங்களோடு இணையும் தருணம்...
உலகின் அளவற்ற இன்பம் யாவும் சொற்பம்!!!

Thursday, January 21, 2010


அளவற்ற மகிழ்ச்சி - கலங்கிய நேரத்தில், நெருங்கிய உறவின் எதிர்பாராத ஆறுதலின் விளைவு



கண்ணில் நீர் துளிர்க்கும் நெகிழ்ச்சி - நெருங்கிய பொழுதில், உற்ற உறவின் எதிர்பாராத உருக்கங்களின் விளைவு


ஆறா துயர் - நந்தவனமான வாழ்வில், மனதில் உறையும் உறவின் எதிர்பாராத இழப்பு ஏற்படுத்தும் விளைவு

தீரா காயமும் கோபமும் - நம்பகமான வேளையில், எதிர்பாராத ஏமாற்றத்தின் விளைவு


மீள முடியா அதிர்ச்சி - அமைதியான நிமிடங்களில், எதிர்பாராத நிகழ்வுகளின் விளைவு


எதிர்பாராத கணத்தில் நிகழும் யாவும் விளைவிக்கும் மிகுதியான உணர்வுகள்!!!