Tuesday, December 22, 2009

மூலவனின் மாயம், இங்கு இயற்கையின் இயக்கம்...

இயற்கையின் அதிசயம், இங்கு உயிர்களின் உருவாக்கம்...



அவ்வுயிர்கள் உறவாவது, விதியின் விளையாட்டு...

விதி இனிதாவது இணக்கமான உணர்வுகளின் நெருக்கத்தால் ...



நெருக்கம் வலியாவது, பிரிவின் காயத்தால்...

பிரிவுகள் நிரந்தரமாவது, அம்மூலவனின் வித்திட்ட சதியால்...

Tuesday, November 10, 2009



அன்னையுடன் நீண்ட உரையாடல்கள்,
தந்தையுடன் பகிர்தல்கள்,
தம்பியுடன் மூன்றாம் உலகப் போர்கள்,
மனதிற்கு நெருங்கிய உறவுகள்.

என் இரு சக்கர வாகனத்தில் வெகு தூர பயணம்,
மின்சார இரயிலில் சிந்தையை கட்டவிழ்த்த பிரயாணம்,
வசை கேட்டினும் அசைவில்லாத நீண்ட உறக்கம்,
மிதமான வாழ்க்கை நந்தவனம்.

வானொலியில் அயராத இசை இன்பம்,
ஒளி வீசும் ஆதவனால் நகரே பிரகாசம்
கிட்டும் தூரத்தில் அனைத்து பொருட்களும் உன் வசம்,
அத்தனை மனம் நிறைக்கும் என் சென்னை வாசம்...!!!


Friday, August 28, 2009


கதவைத் தட்டிய வாய்ப்பாகிய விருந்தாளி, திறப்பதற்கு முன் சென்றாரோ...!!!
வேறு வீட்டின் விருந்தாளி அவர்...கலங்க வேண்டாம்...
உன் வீட்டிற்கு வராத்தால் உனக்கு இழப்புமில்லை...
அடுத்தவன் வீட்டுக்கு சென்றதால் அவன் சிறந்தவன் என்பதும் இல்லை...
இதோ...!
உனது விருந்தாளி உன் திறமை கண்டு உன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்...
தாள் அவிழ்க்க காத்திரு...உறுதியோடு!!!

Tuesday, June 09, 2009

குதூகலிப்பை குறைக்காதே...
கோபத்தை மறைக்காதே...
சோகத்தை சுருக்கதே...
மகிழ்ச்சியை மக்காதே...
தன்மையாய் பேசுவதால் மட்டும் உறவுகள் மேம்படுவதில்லை...
மனதில் நினைத்ததை சொல்வதால் நல் உறவுகளை நீ இழக்கப்போவதுமில்லை...
நீ நீயாய் இருப்பதில் என்றும் பெருமை கொள்...
பிறரை கவர்வதற்காக உன்னை மாற்றுவது போன்று சிறுமை ஏதும் இல்லை...!