அன்னையுடன் நீண்ட உரையாடல்கள்,
தந்தையுடன் பகிர்தல்கள்,
தம்பியுடன் மூன்றாம் உலகப் போர்கள்,
மனதிற்கு நெருங்கிய உறவுகள்.
என் இரு சக்கர வாகனத்தில் வெகு தூர பயணம்,
மின்சார இரயிலில் சிந்தையை கட்டவிழ்த்த பிரயாணம்,
வசை கேட்டினும் அசைவில்லாத நீண்ட உறக்கம்,
மிதமான வாழ்க்கை நந்தவனம்.
வானொலியில் அயராத இசை இன்பம்,
ஒளி வீசும் ஆதவனால் நகரே பிரகாசம்
கிட்டும் தூரத்தில் அனைத்து பொருட்களும் உன் வசம்,
அத்தனை மனம் நிறைக்கும் என் சென்னை வாசம்...!!!
Tuesday, November 10, 2009
Friday, August 28, 2009

கதவைத் தட்டிய வாய்ப்பாகிய விருந்தாளி, திறப்பதற்கு முன் சென்றாரோ...!!!
வேறு வீட்டின் விருந்தாளி அவர்...கலங்க வேண்டாம்...
உன் வீட்டிற்கு வராத்தால் உனக்கு இழப்புமில்லை...
அடுத்தவன் வீட்டுக்கு சென்றதால் அவன் சிறந்தவன் என்பதும் இல்லை...
இதோ...!
உனது விருந்தாளி உன் திறமை கண்டு உன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்...
தாள் அவிழ்க்க காத்திரு...உறுதியோடு!!!
வேறு வீட்டின் விருந்தாளி அவர்...கலங்க வேண்டாம்...
உன் வீட்டிற்கு வராத்தால் உனக்கு இழப்புமில்லை...
அடுத்தவன் வீட்டுக்கு சென்றதால் அவன் சிறந்தவன் என்பதும் இல்லை...
இதோ...!
உனது விருந்தாளி உன் திறமை கண்டு உன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்...
தாள் அவிழ்க்க காத்திரு...உறுதியோடு!!!
Tuesday, June 09, 2009
குதூகலிப்பை குறைக்காதே...கோபத்தை மறைக்காதே...
சோகத்தை சுருக்கதே...
மகிழ்ச்சியை மக்காதே...
தன்மையாய் பேசுவதால் மட்டும் உறவுகள் மேம்படுவதில்லை...
மனதில் நினைத்ததை சொல்வதால் நல் உறவுகளை நீ இழக்கப்போவதுமில்லை...
நீ நீயாய் இருப்பதில் என்றும் பெருமை கொள்...
பிறரை கவர்வதற்காக உன்னை மாற்றுவது போன்று சிறுமை ஏதும் இல்லை...!
Wednesday, January 02, 2008
Sunday, August 19, 2007

விதியின் விந்தை!எப்படி ஏற்பட்டது?! எண்ணிப் பார்க்கிறேன்..
மெத்தனமாக அமைந்த ஒன்று இப்போது அத்தனை திண்ணமாய்...
நிரந்தரமாய்...உறுதியை...
பயம் ஒரு பக்கம்...அதனைக் காட்டிலும் மேலாக மனதில் இதம்...
குழந்தையைப் போல் துள்ளும் சிந்தையின் ஒரு பாதி..அதை பக்குவப்படுத்த துடிக்கும் மற்றொரு பாதி..
காரணம் எதுவோ?!
சேர்க்கையின் சந்தோஷமா...பிரிவின் வலியா???!!
ஹ்ம்ம்...விளக்கங்கள் விடுகதையாய்...
Friday, August 17, 2007
Sunday, June 17, 2007

மனதில் மட்டுமே நினைத்தது நரம்பெங்கும் மின்சாரமாய் பாய்வது என்ன விந்தையோ....
என்ன மின்னல் தாக்கியதோ....இப்படி ஒரு பேரிடி ஊனுக்குள்..
உயிர் உருகி ஊனுக்குள் புயலாவது என்ன அதிசயமோ...
காரணம் அறியாத கண்ணோர நீர்த்துளிகள்...
கண் உறவாடல்களை தவிர்த்து உரையாடல்கள்...
காரணம் அறியா சிலிர்ப்பு..
பிதற்றல்களால் தோன்றும் பெருமகிழ்ச்சி...
இவை ஏன் என்று தெரியாமல் உள்ளூர ஓர் நெகிழ்ச்சி... :)
Tuesday, November 14, 2006
Subscribe to:
Posts (Atom)









